×

‘தினகரன்’ நாளிதழில் பலமுறை சுட்டிக்காட்டியும் தொடர் அலட்சியம்

போச்சம்பள்ளி-கல்லாவி சாலையில், தனியார் பள்ளி அருகே தொடர்ந்து விபத்துகள் நடப்பது குறித்தும், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்தப்பணியை விரைந்து முடிக்குமாறும், தொடர் விபத்தால் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளதாகவும் ‘தினகரன்’ நாளிதழில் பலமுறை செய்தி, புகைப்படத்துடன் சுட்டிக்காட்டப்பட்டது. அதைதொடர்ந்து சாலையை அகலப்படுத்துவதாக கூறி தோண்டி போட்டவர்கள், 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பணியை முடிக்கவில்லை. சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரையும் கண்டிக்கவில்லை. தினமும் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் அப்பாவி பெண் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் உயிர்பலி ஏற்படாதவாறு சாலைப்பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்களும், தன்னார்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Dinakaran ,newspaper ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...