சேலம், நவ.27: சேலம் வீராணம் மெயின்ரோடு சின்னஅம்மாபேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் மீனா (24). சேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி கல்லூரிக்கு சென்ற மீனா மாலையில் வீடு திரும்பவில்லை. தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை. இதுபற்றி ரவி, வீராணம் போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ வரதராஜன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான கல்லூரி மாணவி மீனாவை தேடி வருகின்றனர்.