×

கடம்பூர் அரசு பள்ளியில் தேசிய சட்ட தின விழா

கெங்கவல்லி, நவ.27:  சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், தேசிய சட்ட தினவிழா தலைமை ஆசிரியர் செல்வம் தலைமையில் கொண்டாடப்பட்டது. 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அதை நாம் ஏற்றுக்கொண்ட தினமே தேசிய சட்ட தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக காரணமாக இருந்த வரைவு கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட அம்பேத்கர் மற்றவர்களுடன்  சேர்ந்து அதை தயாரித்தார். இந்திய இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரையை அவரே எழுதினார். உலகில் உள்ள சட்டங்களில் நீளமானதும், 100 தடவைகளுக்கு மேல் திருத்தப்பட்டதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் என தலைமை ஆசிரியர், மாணவர்களிடையே விளக்கி கூறினார். விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,National Legal Day ,Kadampur Government School ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா