×

உத்தமபாளையம் வட்டார அளவில் அதிவேக வாகனங்களுக்கு கடிவாளம் வாகன சோதனையில் ரூ.70 ஆயிரம் அபராதம்

உத்தமபாளையம், நவ. 21: உத்தமபாளையம் வட்டார அளவில் நடந்த சோதனையில் அதிவேக பயணம் மேற்கொண்ட வாகன ஓட்டிகளிடம் ரூ.70 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. உத்தமபாளையம் வட்டார அளவில் உத்தமபாளையம், கம்பம், போடி, தேவாரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், டூவீலர்கள், தனியார் வாகனங்கள் அதிகளவில் பயணிக்கின்றன. இதில் முறையான ஆவணங்கள் இல்லாமை, லைசென்ஸ் இல்லாதது, அரசுக்கு கட்ட வேண்டிய வரிகளை கட்டாமல் இருப்பது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது, அதிவேகம், அதிகபாரம் உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான பயணங்களுடன் வாகனங்கள் செல்வதாக உத்தமபாளையம் பகுதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகாரிகள் குழுவினர் சோதனைகளை மேற்கொண்டனர். இதில் முறையான பயணங்கள் இல்லாமை, மோட்டார் வாகன விதி மீறல், அதிவேகம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் கூறுகையில், ‘மோட்டார் வாகன விதிகளை மீறி பயணம் செய்வதால் தேவையற்ற விபத்துக்கள் உண்டாகின்றன. இதனால் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்குடனும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களை கண்டறிய வேண்டும் என்ற நோக்குடனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது’ என்றார்.

Tags : Uthamapalayam ,
× RELATED பெண் தற்கொலை