×

பெண் சாமியாரிடம் ஆசி பெற சென்ற மெக்கானிக் மயங்கி விழுந்து சாவு சென்னையை சேர்ந்தவர் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, நவ.8: திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள பெண் சாமியாரிடம் ஆசி பெற சென்ற சென்னையை சேர்ந்த மெக்கானிக் மயங்கி விழுந்து இறந்தார்.சென்னை திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்தவர் அறிவரசு(56) மெக்கானிக். இவர் மாதந்தோறும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருவது வழக்கம். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கிரிவல பாதையில் உள்ள ஒரு பெண் சாமியாரிடமும் ஆசி பெறுவாராம்.அதன்படி, கடந்த 5ம் தேதி திருவண்ணாமலை வந்த அறிவரசு அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு, கிரிவல பாதையில் உள்ள பெண் சாமியாரிடம் ஆசி பெறச் சென்றார். அப்போது, அங்குள்ள இருக்கையில் அமர்ந்திருந்த அறிவரசுக்கு திடீரென ெநஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : mechanic ,Madurai ,deceased ,Thiruvannamalai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை