×

மீறினால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை கண்ணில் மிளகாய்பொடி தூவி டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.1.70 லட்சம் கொள்ளை

திருச்சி,நவ.1:  திருச்சி அருகே டாஸ்மாக் ஊழியர்களை வழிமறித்து கண்ணில் மிளகாய்பொடி தூவி ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி-தோகைமலை ரோடு தாயனூர் வாழை ஆராய்ச்சி மையம் அருகே அரியாவூர் ஒத்தக்கடை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. முசிறியை சேர்ந்த திரவியம் மேற்பார்வையாளராகவும், தமிழரசன், குணசேகரன், மணி ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் விற்பனை முடிந்த பின் கடையை மூடிவிட்டு வசூலான ரூ.1.70 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஊழியர்கள் 3 பேர் ஒரே பைக்கில் திருச்சி நோக்கி சென்றனர். வாழை ஆராய்ச்சி மையம் அருகே வந்தபோது,

அங்கு இரண்டு இரு சக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்த 6 பேர் கும்பல் விற்பனையாளர்களை வழிமறித்து கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர். டாஸ்மாக் ஊழியர்கள் மூவரும் பணத்தை தரமறுத்ததால் மூவரின் கண்ணிலும் மிளகாய் பொடியை தூவியுள்ளனர். அப்போது கண் எரிச்சல் தாங்காமல் தடுமாறி டூ வீலருடன் கீழே விழுந்தனர்.  பின்னர் மர்ம நபர்கள் டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் டூ வீலர் களில் தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் சோமசரம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை போலீசார்  கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

Tags : Collector ,Taskmill ,robbery ,
× RELATED குழந்தை திருமணங்களை தடுக்க ஆய்வு கூட்டம்