சென்னை: குரூப்-4 தேர்வு குறித்து அரசு விசாரிக்க பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். டி.என்.பி.எஸ். குரூப்-4 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் தேர்வில் வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.