×

விமான நிலையத்தில் உள்ள பயன்படுத்தாத விமானங்களை அகற்ற வேண்டும்: இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு

சென்னை: விமானநிலையங்களில், நீண்டகாலமாக பயன்பாடின்றி நிறுத்திவைக்கப்பட்டு உள்ள, 3 பழைய விமானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என இந்திய விமானநிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

 இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை விமான நிலையத்தில் உள்ள, பழைய விமானங்களை அகற்றுவதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் காலம்தாழ்த்தி வருகின்றன. அந்த 3 பழைய விமானங்களை உடனடியாக பாதுகாப்புடன் அகற்றவேண்டும். இதுகுறித்து சென்னை விமானநிலைய இயக்குநர் அலுவலகத்தில் வரும் 10ம் தேதி சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில், அந்த 3 பழைய விமானங்களை இந்திய விமானநிலைய ஆணையமே நேரடியாக நடவடிக்கை எடுத்து, அதற்கான செலவு மற்றும் அபராதத்தொகையை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தற்போது பயன்பாட்டில் இல்லாத 3 பழைய விமானங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் அந்தந்த தனியார் நிறுவனங்கள் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

Tags : Airports Authority of India , Airport to dispose of unused aircraft, Airports Authority of India
× RELATED சென்னை விமான நிலையத்தில் இரவு...