சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: கால்பந்தாட்டத்தின் அரசராக, 20ம் நூற்றாண்டில் இணையற்ற தாக்கத்தை செலுத்திய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர் பீலே. கருப்பு முத்து என்று புகழப்பட்ட பீலே என்றென்றும் கால்பந்தின் அடையாளமாக அனைத்து வகையிலும் திகழ்வார். இதனை யாராலும் மறக்க எண்ணாத ஒரு பாரம்பரியத்தை அவர் விட்டு சென்றுள்ளார்.