×

மாமூல் தர மறுத்ததால் கடைக்காரர் மீது சரமாரி தாக்குதல்

பெரம்பூர்: பெரம்பூர் தில்லைநாயகம் மெயின் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் (55). இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் பங்கடை மற்றும் குளிர்பான கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் கடையில் உள்ள  பொருட்களை எடுத்துக்கொண்டு, மாமூல் கேட்டு மிரட்டினர். தர மறுத்ததால் கடையில் இருந்த பொருட்களை அடித்து  உடைத்துள்ளனர்.

தகராறில் ஈடுபட்டவர்களிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என பிரகாசம் கேட்டார். உடனே அவர்கள் அருகில் இருந்த டியூப் லைட்டை எடுத்து பிரகாசம் தலையில் சரமாரியாக அடித்து விட்டு சென்று விட்டனர். உடனடியாக பிரகாசம் அருகில் இருந்த பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இதுகுறித்து திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையில் கொளத்தூர் பிஎம்என் நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் (19), பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெரு பகுதியை சேர்ந்த மகேஷ் (20), பெரம்பூர்  ராகவன் தெரு பகுதியை சேர்ந்த மிதுன் (21) ஆகியோர் மாமூல் கேட்டு மிரட்டியது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர்.

Tags : Mamool , Barrage attack on shopkeeper for refusing to give Mamul
× RELATED காதலிக்கு போலீஸ் உடை அணிவித்து மாமூல்...