- திமுக
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கொறடா கோவை.செழியன்
- சென்னை
- தமிழ்
- நாடு சட்டமன்றம்
- திமுக அரசு
- தி.மு.க. எம்.எல்.ஏக்கள்
- தின மலர்
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 21ம் தேதி நடக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று நடக்கும் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையாற்றுகிறார். ஆளுநர் உரையுடன் அன்றைய கூட்டம் நிறைவடையும். அதன் பிறகு சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி எத்தனை நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும். அநேகமாக இந்த கூட்டம் சுமார் 4 நாட்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு நடக்க வேண்டும், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்ட அறிவிப்பு: முதல்வர், தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், ”கலைஞர் அரங்கில்” நடைபெறும். அதுபோது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்….
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: கொறடா கோவி.செழியன் அறிவிப்பு appeared first on Dinakaran.