சென்னை: நளினியை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.