×

நாமக்கல் அருகே கேட்பாரற்று நின்றிருந்த டேங்கர் லாரியில் 4,000 லிட்டர் கலப்பட டீசல் சிக்கியது: போலீசார் விசாரணை

நாமக்கல்: நாமக்கல் அருகே கேட்பாரற்று நின்றிருந்த டேங்கர் லாரியில் 4,000 லிட்டர் கலப்பட டீசல் சிக்கியது. வள்ளிபுரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மினி டேங்கர் லாரியில் கலப்பட டீசல் இருக்கலாம் என ஒருவர் தொலைபேசியில் தகவல் அளித்தார். நாமக்கல் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்று ஆய்வு செய்தபோது கலப்பட டீசல் சிக்கியது. மினி லாரி உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Namakkal , Namakkal, tanker truck, blended diesel
× RELATED நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்