×

வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட சிறுவர்கள் உற்சாக குளியல்

ரெட்டிச்சாவடி : தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் தான் வெப்ப நிலை அதிகரிக்கும். ஆனால் இந்தாண்டு மார்ச் மாதம் முதலே சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகிறது. கால நிலை மாற்றத்தால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் மைதானத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதிய நேரத்தில் கிரிக்கெட் விளையாடுவதை காணமுடிகிறது. மேலும் வெயிலின் தாக்கத்தை தணிக்க திருப்பணாம்பாக்கம் ஏரியில் ஒரு பகுதியில் நீர்மட்டம் குறையாமல் உள்ளதில் அப்பகுதி சிறுவர்கள் ஏரியில் மீன் பிடிப்பது, நண்பர்களுடன் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

The post வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட சிறுவர்கள் உற்சாக குளியல் appeared first on Dinakaran.

Tags : Reddychavadi ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...