திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகாதீபம் நாளை மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அதையொட்டி, மகாதீப கொப்பரையை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கை சுமையாக மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மழையும் பொருட்படுத்தாமல் மலை உச்சிக்கு பணியாளர்கள் கொண்டு செல்கின்றனர்.