×

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமிழக பாஜவில் பதவியில் உள்ளனர்: தமிழிசை பரபரப்பு பேட்டி

சென்னை: பாஜவில் சில மாவட்டங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதவியில் இருக்கின்றனர் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை கூறினார். சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: சின்ன வருத்தம் என்னவென்றால் நான் கட்சி தலைவராக இருக்கும்போது சமூக விரோதிகள் போல் இருந்தால் ரொம்ப ஊக்கப்படுத்த மாட்டேன். ஆனால் சமீபகாலமாக பாஜ கட்சிக்குள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சில மாவட்டங்களில் இருக்கின்றனர்.

அவர்கள் பதவி கிடைத்தவர்களாக இருக்கின்றனர். அதையெல்லாம் தவிர்த்து கட்சியில் கடுமையாக உழைக்கக்கூடிய தொண்டர்களுக்கு அதிகாரம் கொடுத்து, அங்கீகாரம் தர வேண்டும். தற்போது உள்ள தலைவர் நல்ல தலைவர் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒவ்வொரு தலைவருக்கும் முடிவுகள் வேறுவேறாக இருக்கலாம். நான் என்னுடைய கருத்தை சொன்னேன். இவ்வாறு தமிழிசை கூறினார்.

The post குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமிழக பாஜவில் பதவியில் உள்ளனர்: தமிழிசை பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Tamilisai ,CHENNAI ,
× RELATED எதையும் எதிர்பார்த்து டெல்லி செல்லவில்லை: தமிழிசை பேட்டி