சென்னை: மூத்த வழக்கறிஞர் 85 வயதான என். நடராஜன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சி.பி.ஐ. தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 226 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தனது வாதத்தால் குறைத்தவர் என். நடராஜன். மேலும் இவர் பல்வேறு வழக்குகளில் கலைஞர் கருணாநிதிக்காக வாதாடியவர் என்பது குறிப்பிடதக்கது.