சென்னை: பெரியார் பிறந்தநாள், இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகர் சத்யராஜ் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், ‘பிறப்பால் யாரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை என்ற அறப்பால் தந்த அய்யாவின் கருத்தால் கவரப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதல்வர், எங்களின் பெருமைக்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று அறிவித்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.