×

பத்திரப் பதிவுத்துறையில் 4 கூடுதல் ஐஜிக்கள் 9 டிஐஜிக்கள் மாற்றம்

சென்னை: பதிவுத்துறையில் 4 கூடுதல் ஐஜிக்கள் மற்றும் 9 டிஐஜிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு: பதிவுத்துறையில் முத்திரைத்தாள் மற்றும் பதிவு பிரிவு கூடுதல் ஐஜியாக இருந்த கே.வி.சீனிவாசன் மாற்றப்பட்டு, வழிகாட்டு பிரிவு கூடுதல் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சீட்டு மற்றும் சங்கங்களின் கூடுதல் ஐஜி அங்கையர்கன்னி, உளவுப் பிரிவு கூடுதல் ஐஜியாகவும், இந்த பதவியில் இருந்த முகமது ஜாபர் சித்திக் சீட்டு மற்றும் சங்க கூடுதல் ஐஜியாகவும், வழிகாட்டு பிரிவு ஐஜியாக இருந்த நல்லசிவம், முத்திரைத்தாள் மற்றும் பதிவு பிரிவு கூடுதல் ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதிவுத்துறை டிஐஜியாக உள்ள ஜனார்த்தனம், கடலூர் மண்டல பதிவுத்துறைக்கும், கடலூர் மண்டல பதிவில் இருந்த ஆனந்த், தஞ்சாவூர் மண்டல பதவிக்கும், சென்னை மண்டல பதிவு டிஐஜியாக இருந்த பிரபாகர், சேலம் மண்டல பதிவுத்துறைக்கும், சேலம் மண்டல பதிவில் இருந்த அருள்சாமி, வேலூர் மண்டல பதிவுக்கும், கோவை மண்டல பதிவில் இருந்த வாசுகி, சென்னை பதிவு பயிற்சி மைய இயக்குனராகவும், இந்த பதவியில் இருந்த ஜெகதீசன், மதுரை மண்டல பதிவு டிஐஜியாகவும், திருச்சி மண்டல பதிவு டிஐஜியாக சேர்ந்த சேகர், சென்னை பதிவு மண்டல டிஐஜியாகவும், மதுரை மண்டல டிஐஜியாக இருந்த சுவாமிநாதன், கோவை மண்டலத்துக்கும், தஞ்சை மண்டல டிஐஜியாக இருந்த லதா, திருச்சி மண்டலத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Transfer of 4 additional IGs and 9 DIGs in securities
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...