×

3.50 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து ஊசி ஒதுக்க முடிவு: பிரதமருக்கு எல்.முருகன் நன்றி

சென்னை: தமிழகத்துக்கு ரெம்டெசிவிர் ஊசியை  3.50 லட்சமாக அதிகரித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் தமிழக மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று எல்.முருகன் தெரிவித்தார். இது குறித்து தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் அறிக்கை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே 2.5 லட்சம் ரெம்டெசிவிர் ஒதுக்கப்பட்டிருந்த  நிலையில் தமிழக நலன் கருதி தமிழகத்திற்காக 3.50 லட்சமாக அதிகரித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசிற்கும், தமிழக மக்களின் சார்பாகவும், தமிழக பாஜ சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.



Tags : L. Murugan , 3.50 lakh Remdecivir injection decision: L. Murugan thanks PM
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...