×

மதுவிற்ற 3 பேர் கைது

ஊத்தங்கரை, ஏப்.4: ஊத்தங்கரை அருகே, மிட்டப்பள்ளி பகுதியில், சிங்காரப்பேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், ஊத்தங்கரை போலீசார் காரப்பட்டு பகுதியில் ரோந்து சென்றபோது, மதுவிற்ற பெருமாள் (64) என்பவரை கைது செய்து, 5 பாட்டில்களையும், தேவி (40) என்பவரை கைது செய்து 4 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

The post மதுவிற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Singarapet ,Mittapalli ,Dinakaran ,
× RELATED நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிய 2 பேர் கைது