×

2 கோடி ஆண்டுகளுக்கும் பிறகும் உயிர்த்திருக்கும் அதிசய மரம் : விஞ்ஞானிகள் வியப்பு!!

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எரிமலைகள் நிறைந்த லெஸ்போஸ் தீவில் மண்ணில் புதைந்த, 2 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல் மரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கிரேக்க நாட்டில் உள்ளது லெஸ்போஸ் (Lesbos) தீவு. இந்தத் தீவில் சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்ததால் வனத்திலிருந்த மரங்களும் உயிரினங்களும் எரிமலை சாம்பலில் புதையுண்டன. இங்குள்ள 15 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பழங்கால புதையுண்ட காடு யுனெஸ்கோ (UNESCO) பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அண்மையில் இங்கு நடைபெற்ற சாலைப் பணியின்போது 19 அடி நீளம் உள்ள புதை படிவ கல் மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரண்டு கோடி ஆண்டுகள் கடந்த பின்பும் இந்த மரத்தின் வேர்கள் மற்றும் கிளைகள் இன்னும் அப்படியே சிதைவடையாமல் இருப்பது தான். இரண்டு கோடி ஆண்டுகளாக இந்த மரம், எரிமலை சாம்பல் கொண்டு மூடப்பட்டிருந்ததால், பாதுகாப்பாக இருந்ததாகவும் இது போன்று முழுமையான கல் மரம் கிடைப்பது அரிதானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Scientists , கல் மரம்
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு