×

சசிகலா மரியாதையுடன் போற்றக்கூடியவர்...ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் : கோகுல இந்திரா புகழாரம்!!

சென்னை : சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற நினைத்தவர் சசிகலா. முதல்வராக பதவியேற்க இருந்த சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் கைதாகி கடந்த 2017ம் ஆண்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் என உடைந்த அதிமுக மீண்டும் இணைந்து கட்சியில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்திற்கு இடமில்லை என்று அறிவித்தது.

இதையடுத்து வரும் ஜனவரி 27ம் தேதி 4 ஆண்டுகால சிறைவாசத்திற்கு பிறகு சசிகலா விடுதலையாகிறார். சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அதிமுக அமைச்சர்கள் உள்பட பலரும் கூறி வருகின்றனர்.இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவை புகழ்ந்து பேசியுள்ளார். அதில், கட்சியின் தலைவராக இருந்தவர் சசிகலா.அவர் எங்கு இருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக்கூடியவர். ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா. எங்கே இருந்தாலும் சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.சசிகலா வெளியே வந்தாலும் ஒன்றும் நடக்காது, என்றார்.


Tags : Sasikala ,Gokula Indira ,Jayalalithaa , Sasikala, Gokula Indira, Praise
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...