×

இ.ஓ.எஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி 49

ஸ்ரீஹரிகோட்டா: இ.ஓ.எஸ் -01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இன்று மதியம் 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட் 3.12க்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கொரோனா பாதிப்புக்கிடையே இந்தாண்டின் முதல் ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி-சி 49ஐ இஸ்ரோ ஏவியுள்ளது. அனைத்து சூழலிலும் படங்கள் எடுக்கும் சின்தடிக் அபர்ச்சர் ரேடார் தொழில்நுட்பம் இ.ஓ.எஸ்-01ல் உள்ளது.

Tags : PSLV-C49 , PSLV
× RELATED இ.ஓ.எஸ்-01 புவி கண்காணிப்பு...