×

கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 7ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் மாதம் கைது செய்தது. அவர் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே இந்த கைதுக்கு எதிராக அமலாக்கத்துறை கைதுஷ்டா விரோதம் என தெரிவித்து அதை ரத்து செய்யக்கோரியும், இடைக்கால ஜாமின் வழங்ககோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் இறுதியாக வைக்கப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி இந்த வழக்கில் அவர் குற்றம்சாட்டப்பட்ட நபராகவே இருந்தபோது திடீரென மார்ச் 22ம் தேதி அவரை கைது செய்தது ஏற்று கொள்ள முடியாது, இது சட்ட விரோத கைது என வாதிட்டார். இதற்கு அமலாக்கத்துறை சார்பில் கடுமையான பதில் மனு, விவாதங்கள் நடைபெற்றது. நீதிமன்ற அலுவலக நேரம் நிறைவடைவதற்கு முன் இந்த வழக்கு விசாரணையை 7ம் தேதி செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். விசாரணை நிறைவடைய அதிக நாட்கள் ஆகும் பட்சத்தில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் அளிப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர் .

The post கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Kejriwal ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Directorate ,Tihar ,
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...