சென்னை: இலவசமாக கொரோனா தடுப்பூசி எல்லோருக்கும் என்ற முதல்வர் பழனிசாமி அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். பேரழிவு காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமை. மக்கள் நல அரசின் கடமையை மக்களுக்கு காட்டும் மாபெரும் சலுகை போல் பழனிசாமி நினைத்துக் கொள்கிறார். எதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வாழ்வாதாரம் பாதித்து நிர்க்கதியாய் இருக்கும் மக்களுக்கு ரூ.5,000 நிதியுதவி செய்ய முதல்வருக்கு மனமில்லை. இலவச தடுப்பூசி என்று தாராளப் பிரபுவாக காட்டிக் கொள்ள முதல்வர் போடும் நாடகத்தை காண சகிக்கவில்லை என கூறினார்.