×

பி.இ. செமஸ்டர் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் செப்.19ம் தேதி வரை நீட்டிப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பி.இ செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை வரும் 19ம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்து அறிவித்திருக்கிறது. அபாரதத்துடன் செலுத்துவதற்கான கெடு நாளை முடியும் நிலையில் செப்டம்பர் 19ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் நவம்பர் பருவத்தேர்வுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி நாளாக ஆகஸ்ட் 31ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 2ம் தேதி வரை அபாரதத்துடன் கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்டு 5ம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.

அதில், செமஸ்டர் தேர்வுக்கான கட்டணத்தை ஆகஸ்டு 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறினால் அபராதத்துடன் சில படிப்புகளுக்கு செப்டம்பர் 3ம் தேதிக்குள்ளும், சில படிப்புகளுக்கு செப்டம்பர் 5ம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்த தவறும் மாணவர்கள், வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெயர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்பட்டு, செப்டம்பர் 7ம் தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் என்று பல்கலைக்கழகம் எச்சரித்திருந்தது. . அதனை தொடர்ந்து எஸ்.எஸ்.ஐ. தரப்பில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று வரவுள்ள நிலையில் பி.இ செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

Tags : Anna University , Semester Fee, Opportunity, 19th, Extended, Anna University
× RELATED மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை....