புழல்: கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (41). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு வந்து மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். புழல் அடுத்த தண்டல்கழனி ஜி.என்.டி சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த புஷ்பராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.