×

விவசாயிகளின் வேதனைக் குரல்கள் டெல்டாவிற்கு செல்லும் நேரத்திலாவது முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:  ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்தும் இன்னும் கடைமடைப் பகுதிக்குக் காவிரி நீர் போய்ச் சேரவில்லை. கடைமடைக்குக் காவிரி நீர் வரவில்லை என்று டெல்டா விவசாயிகள் கதறுவதை முதலமைச்சர் பழனிசாமி இதுவரை கண்டுகொள்ளவும் இல்லை. . கடைமடைப் பகுதிவரை நீர் செல்வதற்குச் சாளுவன் ஆற்றை உடனே தூர்வாருங்கள் என்று கோரிக்கை விடுத்து- கோட்டூர் ஒன்றியத்தில் ஆற்றில் இறங்கிப் போராட்டம் நடத்தும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். தற்போது தாமதமாகத் துவங்கிய தூர்வாரும் பணிகளும் முறைப்படி செய்யப்படாமல்,  “கமிஷனுக்காகவே” அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
 நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் நீரேற்று சங்கம் என்ற பெயரில் கிணறு வெட்டி- நீர்ப் பாசன வசதி செய்வதற்கு ஒரு விவசாயிக்கு 1.25 லட்சம் ரூபாய் வரை “மெகா” வசூல் செய்யப்படுவதாக ஓர் அதிர்ச்சித் தகவல் வெளிவந்து
கொண்டிருக்கிறது.

இந்த வசூல் அரசின் சார்பில் நடக்கிறதா, அரசு மட்டத்தில் இல்லாமல் அமைச்சர் பெயரில் நடக்கிறதா என்ற சர்ச்சை நாமக்கல் மாவட்டம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியிருக்கிறது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் வேதனைக்குரல்கள் இதுவரை முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டவில்லை என்றாலும்- தூர்வாரும் பணிகளைப் பார்வையிடக் காவிரி டெல்டாவிற்குச் செல்லும் நேரத்திலாவது- இந்த வேதனைக்குரல்கள் எட்டும் என்று நம்புகிறேன். அதிகாரிகளை அழைத்துப் பேசி- கடைமடைப் பகுதிக்கும் காவிரி நீர் செல்வதற்கு, தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவும், விவசாயிகளுக்குத் தேவையான கடன் உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைப்பதற்கு  உரிய நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,Delta ,DMK , agonizing voices,farmers reach ,chief ,Delta, DMK leader MK Stalin's
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...