×

சென்னை, மும்பையில் இருந்து விமானத்தில் வந்த 16 பேரை தனிமைப்படுத்த எதிர்ப்பு: நெல்லையில் பரபரப்பு

நெல்லை: சென்னை மற்றும் மும்பையில் இருந்து தூத்துக்குடி வழியாக விமானத்தில் நெல்லை வந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மற்றும் மும்பையில் இருந்து விமானம் மூலம் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த சிலர், வாகைக்குளம் விமான நிலையம் வந்திறங்கினர். இவர்களில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 16 பேர், ஒரு வாகனத்தில் வண்ணார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டனர். இங்குள்ள தனியார் விடுதியில் அவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், ஏற்கனவே தங்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. எனவே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் இது வழக்கமான நடைமுறைதான் என்றும், மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள், தங்களது அறைகளுக்கு சென்றனர்.


Tags : persons ,Chennai ,Mumbai Chennai ,protest ,Mumbai , Chennai, Mumbai, 16, isolation, protest
× RELATED குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனை: 165 நபர்கள் கைது