×

2 பேர் சாவு பற்றி வதந்தி பா.ஜ. எம்பி மீது வழக்கு

மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனையில் இறந்த இருவரது உடல்கள் கடந்த 12ம் தேதி நள்ளிரவு தகனம் செய்யப்பட்டன. இவர்கள் இருவரும் கொரோனா வைரசால் இறந்ததாக சிலர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இது குறித்து பங்குரா தொகுதி பாஜ எம்.பி சுபாஷ் சர்கார் சமூக இணையதளத்தில் தெரிவித்த கருத்தில், ‘கொரோனா வைரசால் இறந்ததாக கூறி இருவர் உடல்களையும் எரித்தது தவறு. மருத்துவ அறிக்கை வெளிவராமல் மாவட்ட நிர்வாகத்தினர் எப்படி தகனம் செய்தனர்? என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஜெயதீப் சத்தோபத்யாய் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, கொரோனா பரவும் நேரத்தில் சமூக இணையதளத்தில் வதந்தி பரப்புவதாக கூறிய எம்.பி.சுபாஷ் சர்கார் மீது போலீார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.


Tags : 2 dead, gossip and BJP MP, the case
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்