×

வருமான வரித்துறை விசாரணைக்குப் பின்னர் நடிகர் விஜய் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பு

சென்னை : வருமான வரித்துறை விசாரணைக்குப் பின்னர் நடிகர் விஜய் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார். நெய்வேலியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியதால் ரசிகர்கள், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். பட நிறுவன அலுவலகங்கள் மற்றும் சினிமா பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை விசாரணைக்கு வருமான வரித்துறையினர் அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.


Tags : Vijay ,re-shoot , Income Tax Department, Actor, Vijay, Shooting
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விஜய் விகாஸ் மெட்ரிக் பள்ளி சாதனை