×

மதுரையில் 23ம் தேதி விழா மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறோம்: ராஜகண்ணப்பன் பேட்டி

மதுரை: மதுரையில் வரும் 23ம் தேதி நடக்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 2 லட்சம் பேருடன் திமுகவில் இணைகிறேன் என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு 194 சட்டப்பேரவை தொகுதிகளில் எனது ஆதரவாளர்கள் உள்ளனர்.

அவர்களும், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 2 லட்சம் பேர் எனது தலைமையில் திமுகவில் இணைய முடிவு செய்துள்ளோம். இதற்கான இணைப்பு விழா வரும் 23ம் தேதி மாலை 4 மணிக்கு மதுரை யானைமலை ஒத்தக்கடை மைதானத்தில் நடக்கிறது. அப்ேபாது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைகிறோம். தமிழகத்தின் நலன் காக்க, உரிமைகளை மீட்க, விரைவில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும். அவரது நல்லாட்சியை எதிர்கால சமுதாயம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. பல்வேறு வகைகளில் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து, அவரது தலைமையை ஏற்று இணைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : MK Stalin ,Interview ,Madurai ,DMK ,Rajakannappan ,Rajagannan , ceremony,Madurai,MK Stalin,Rajagannan
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...