×

துளையிடும் பணிகளில் திருப்தி தரும் வகையில் முன்னேற்றம் இல்லை: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

மணப்பாறை: குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் துளையிடும் பணிகளில் திருப்தி தரும் வகையில் முன்னேற்றம் இல்லை என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார். மேலும் குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளார். தொழில்முறையில் என்ன நடவடிக்கை எடுக்கமுடியுமோ அதைத்தான் செய்த்து வருகிறோம் என அவர் விளக்கம் அளித்துள்ளார். கேமரா மூலம் குழந்தையை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது. ஓ.என்.ஜி.சி ஆலோசனை படி துளையிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

Tags : Radhakrishnan ,Commissioner of Revenue Administration , Baby Surjit, Commissioner of Revenue, Radhakrishnan, Deepwater Well, Manapara, Medakkattupara, Rescue Work
× RELATED சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட...