×

அலையில் சிக்கி வாலிபர் மாயம்

சென்னை: திருப்பூர் விக்னேஷ்வர் நகரை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்(20). இவர் கடந்த வாரம் சென்னைக்கு தனது நண்பர்களுடன் சென்னைக்கு சுற்றுலா வந்தார். நேற்று முன்தினம் மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க வந்த போது, கோகுலகிருஷ்ணன் கடலில் குளித்துள்ளார். அப்போது ராட்சத அலையில் கோகுலகிருஷ்ணன் சிக்கி திடீரென மாயமானார். இதை பார்த்த சக நண்பர்கள் அதிர்ச்சியடைந்த அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்த மீனவர்கள் கடலில் இறங்கி தேடினார். ஆனால் கோகுலகிருஷ்ணன் கிடைக்கவில்லை. அண்ணாசதுக்கம் போலீசார்  மாயமான கோகுலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.


Tags : wizard magic, caught in the wave
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...