×

மதுரை விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தேர்தல் ஆணையத்தில் இன்று அறிக்கை அளிப்பார்: சத்யபிரதா சாகு

சென்னை: மதுரை விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தேர்தல் ஆணையத்தில் இன்று அறிக்கை அளிப்பார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். வாக்கு எண்ணும் மையத்திற்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனை நாளை நடைபெற உள்ளது எனவும், ஆலோசனையில் மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் டிஜிபி, காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Balagi ,Madurai ,Satyabrata Sahu , Additional Chief Electoral,Officer Balagi,present report,Madurai issue,today, Satyabrata Sahu
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...