×

தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் 2 கார்கள் எரிந்ததால் பரபரப்பு

 சென்னை: சாலிகிராமம் கனரா பாங்க் காலனியை ேசர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவு தனது காரில் தி.நகர் ஜிஎன்.செட்டி சாலையில் உள்ள கடைக்கு வந்துள்ளார். பின்னர், அங்குள்ள ஒரு பங்க்கில் தனது காருக்கு பெட்ரோல் நிரப்ப வந்தார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர், காரில் பெட்ரோலுக்கு பதில் டீசல் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ரமேஷ் அதிர்ச்சியடைந்து ஊழியர்களை திட்டிவிட்டு, தனது காரை வீட்டை நோக்கி எடுத்து சென்றார். ஆனால் காரில் டீசல் இருந்ததால் சிறிது தூரம் சென்று ஜிஎன்.செட்டி சாலையில் கார் பழுதாகி நின்றது.

பின்னர் காரை சரிசெய்ய மெக்கானிக்கை அழைத்துள்ளார். இரவு நேரம் என்பதால் நாளை வருவதாக தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து ரமேஷ் தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை மெக்கானிக்கை அழைத்து வந்து, கார் டேங்கில் இருந்த டீசலை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத வகையில் பேட்டரியில் இருந்து மின் கவுசி ஏற்பட்டு, கார் தீப்பிடித்து எரிந்தது. உடனே காரில் இருந்த ரமேஷ் மற்றும் மெக்கானிக் ஆகியோர் வெளியே ஓடிவந்தனர்.

சிறிது நேரத்தில் கார் மளமளவென எரிந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மாதவன் என்பவருக்கு சொந்தமான காரிலும் தீப்பிடித்தது. தகவலறிந்து, தி.நகர் மற்றும் தேனாம்பேட்டை பகுதியில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  இந்த விபத்தில் 2 கார்களும் முழுமையாக எரிந்து நாசமானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,TNagar Gnceti , T.Nagar G.Centie, road, cars, burned, thrust
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...