×

அடையாறு நட்சத்திர ஓட்டலில் டோனியை சந்திக்க முயன்ற அதிகாரியால் திடீர் பரபரப்பு

* பார்க்கும் ஆவலில் பல லட்சம் செலவில்
அறை எடுத்ததும் விசாரணையில் அம்பலம்

சென்னை: அடையாறு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் டோனியை பார்க்க தடையை மீறி அவரது அறைக்கு செல்ல முயன்ற பிஎஸ்என்எல் அதிகாரியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 12வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த வாரம் சென்னையில் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான இந்திய கிரிக்கெட் வீரர் டோனி மற்றும் ெவளிநாட்டு வீரர்கள் சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீர்கள் டோனி உட்பட அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். அப்போது, டோனி அறைக்கு சென்றதும், திடீரென ஒருவர் பக்கத்து அறையில் இருந்து டோனி அறையில் நுழைய முயன்றார். அதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை பிடித்து தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் சச்சிதானந்தம் என்றும், டோனியின் தீவிர ரசிகரான இவர், டோனியுடன் தனியாக பேசி புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு பல லட்சம் செலவு செய்து டோனி தங்கி உள்ள அறைக்கு பக்கத்து அறையை எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் பிஎஸ்என்எல் அதிகாரியான சச்சிதானந்தத்திடம் இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது என கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : stirring ,officer ,Toni , officer, dhoni, Adyar star hotel
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல்...