* பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பறவைகள் கூடு கட்டுவதற்கு தேவையான பெரிய அளவிலான மரங்களோ அல்லது செயற்கை வாழிடங்களோ ஏதும் இப்பகுதியில் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் இரை தேடி வரும் பறவைகள், இரவு நேரங்களில் தங்குவற்காக வேறு பகுதியிலுள்ள மரங்களை நாடிச் செல்கின்றன. மேலும் இங்கு வரும் பறவைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் அவை விலங்குகளால் வேட்டையாடப்படுகின்றன.
குளத்து நீரில் இரை தேடிய பின் கரையோரம் உள்ள புல்வெளிகளில் இறக்கைகளை உலர்த்தி இளைப்பாறும்போது நாய், நரி போன்ற விலங்குளால் நீர்ப்பறவைகள் கொல்லப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கொல்லப்பட்ட பறவைகளின் இறகுகளும், எலும்புகளும் சிதறிக் கிடக்கின்றன. பறவைகள் நலன் கருதி இப்பகுதியில் மரங்கள் வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டநாளைய கோரிக்கையாக உள்ளது. தற்போது வனத்துறை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
