×

ஏடிஎம் கார்டு மோசடி சிசிபிக்கு மாற்றம்

சென்னை: சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில், போலியான ஏடிஎம் கார்டுகள் மூலம் பணத்தை திருடிய ருமேனியா நாட்டை சேர்ந்த நிகோலாய் கியம்லிசி (35), செர்சி ஜார்ஜ் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகள், 70 ஆயிரம், போலி ஏடிஎம் கார்டு தயாரிக்கும் கருவி கைப்பற்றினர். கைதானவர்கள்  வெளிநாட்டை சேர்ந்த வர்கள் என்பதால் சர்வதேச அளவில் ஏதாவது கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற நோக்கத்தில், மடிப்பாக்கம் போலீசார் இந்த வழக்கை மேல் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CCP , ATM card fraud ,shifting to CCP
× RELATED வாக்கு சதவீத முரண்பாடு கவலை தருகிறது: சீதாராம் யெச்சூரி