×

பணி உயர்வு பிரச்னை பெண் இன்ஜினியர் தற்கொலை

சென்னை: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் நித்யா (25). சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், சரோஜினி தெருவில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.  பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அந்நிறுவனத்தில் பணி உயர்வு தராமல் இழுத்தடித்ததால் நித்யா கடும் மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில், அவரது நண்பர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றனர். வீட்டில் தனியாக இருந்த நித்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : woman hijacker , Suicide , woman hijacker
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...