கீவ்: 40 வெடிகுண்டு நிரப்பிய டிரோன்கன் மூலம் நடத்திய தாக்குதலுக்கு உக்ரைன் கொடுத்த பதிலடியில் 63 ரஷ்ய வீரர்கள் பலியாகி விட்டனர். ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது. ரஷ்யா விமான தளத்தில் கடந்த வாரம் உக்ரைன் டிரோன்கள் கண்டறியப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் நேற்று முன்தினம் ரஷ்யா வெடிகுண்டு நிரப்பிய சுமார் 40 டிரோன்களை உக்ரைன் மீது ஏவியுள்ளது. தலைநகர் கீவ்வில் மட்டும் 22 வெடிகுண்டு டிரோன்கள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கீவ் மேயர் விடாலி கிலிட்ஸ்சோகோ கூறுகையில்,‘‘விமான படை அறிக்கையின்படி ரஷ்யா ஏவிய 40 டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. தலைநகர் கீவ்வில் 22 டிரோன்களும், நகருக்கு வெளியே 3 டிரோன்களும் மற்றும் மற்ற பிராந்தியங்களில் 15டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது” என்றார். இந்தநிலையில் ரஷ்யா ஆக்கிரமித்த டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் 6 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 63 வீரர்கள் பலியாகி விட்டதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. 2 ராக்கெட்டுகளை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்து உள்ளது….
The post 40 டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடியில் 63 ரஷ்ய வீரர்கள் பலி appeared first on Dinakaran.