×

கூர்மையான கத்தி வைத்திருக்க கூறிய பாஜ பெண் எம்பி மீது 7 பிரிவில் வழக்கு

பெங்களூரு: பெண்கள் கூர்மையான கத்தி வைத்திருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜ  பெண் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மீது கர்நாடகா போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் ஷிவமொக்காவில் நடந்த இந்து ஜாக்ரனா வேதிகே தெற்கு மண்டல வருடாந்திர கூட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜ எம்பி பிரக்யா சிங் தாக்கூர், ‘ஒரு சன்யாசியின் புரிதலின்படி இந்த உலகில் பாவிகளையும், அடக்குமுறையாளர்களையும் அப்புறப்படுத்தும் வரை அன்பின் உண்மையான அர்த்தம் வாழாது. அதனால், லவ் ஜிகாத்தில் ஈடுபடுவர்களையும் பாவிகளைப் போலவே நடத்த வேண்டும். அதனால் உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். ஆயுதங்கள் இல்லாவிட்டால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். எப்போது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை’ என்று பேசினார். இவரது பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பிரக்யா சிங் தாக்கூருக்கு எதிராக ஏழு பிரிவுகளின் கீழ் கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

The post கூர்மையான கத்தி வைத்திருக்க கூறிய பாஜ பெண் எம்பி மீது 7 பிரிவில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Paja Girl ,Pragya Singh ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்