- மோடி
- பாக்கிஸ்தான்
- வேளாங்கண்ணி ஒன்றியம்
- கொல்கத்தா
- இந்தியா
- யூனியன்
- பல்பீர் சிங் ராஜே
- தலைவர் நடவடிக்கை
- தின மலர்
கொல்கத்தா: ‘இந்தியாவுக்கு பாகிஸ்தானை காட்டிலும் மிகப்பெரிய அச்சுறுத்தல் பிரதமர் மோடிதான்,’ என விவசாய சங்க தலைவர் பல்பிர் சிங் ரஜேவால் கூறியுள்ளார். மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடும் நிலையில், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கத்தில் பாஜ.வுக்கு எதிரான பிரசாரத்தில் விவசாய சங்க தலைவர்கள் களமிறங்கி உள்ளனர். 5 மாநில தேர்தலில் பாஜ.வை வீழ்த்தும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்ற பிரசாரத்தை விவசாய சங்க தலைவர்கள் செய்து வருகின்றனர். கொல்கத்தாவில் நேற்று நடந்த விவசாயிகள் மகா பஞ்சாயத்தில் விவசாய சங்கத் தலைவர் பல்பிர் சிங் ரஜேவால் பேசுகையில், ‘‘மோடி அரசு, வாக்கு வங்கி கொள்கையை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆகவே, அவர்களை தேர்தலில் வீழ்த்த வேண்டும். மோடிக்கும், அவரது கட்சிக்கும் மட்டும் வாக்களிக்காதீர்கள். இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பாகிஸ்தான் அல்ல, பிரதமர் மோடி தான்,’’ என்றார்.ஆதரவும், எதிர்ப்பும்பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான அர்ஜூன் சிங், பல்பிர் சிங்கின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘பேச்சு சுதந்திரம் என கூறிக் கொண்டு சில தலைவர்கள், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளை புகழ்வது தரம்தாழ்ந்த அரசியல். சட்டப்படி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றார்….
The post பாகிஸ்தானை காட்டிலும் பெரிய அச்சுறுத்தல் பிரதமர் மோடிதான்: விவசாய சங்க தலைவர் அதிரடி appeared first on Dinakaran.