×

போதை வழக்கில் தெலுங்கு நடிகர் அபிஷேக் கைது

ஐதராபாத்: போதை பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த தெலுங்கு நடிகர் அபிஷேக் கைது செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்க கோகைன் சப்ளையர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த நடிகர் அபிஷேக், மும்பை மற்றும் கோவா, புனே ஆகிய இடங்களில் கோகைன் சப்ளை செய்து வந்தார். 2012ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் இவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர் தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், அபிஷேக் கோவாவில் உணவகம் நடத்தி வருவதும், அங்கிருந்து போதைப்பொருள் வியாபாரம் செய்து வருவதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்புக்குழு போலீசார், கோவாவில் அபிஷேக்கை கண்காணித்து கைது செய்தனர். போதை வழக்கில் சிக்குவதற்கு முன் அவர் 6 தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.

The post போதை வழக்கில் தெலுங்கு நடிகர் அபிஷேக் கைது appeared first on Dinakaran.

Tags : Abhishek ,Hyderabad ,Mumbai ,Goa, Pune ,
× RELATED சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக...