×

வீட்டுக்குள் கார் புகுந்து 4ம் வகுப்பு மாணவி பலி

பொங்கலூர்: கார் மோதிய விபத்தில் வீட்டின் முன் விளையாடிய சிறுமி பலியானார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கல்லம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. கூலித்தொழிலாளி. இவருக்கு துளசிமணி என்ற மனைவியும் ஷாருகாசினி (10) என்ற மகளும், ஒரு கைக்குழந்தையும் உள்ளனர். இவர்களில் ஷாருகாசினி வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சிறுமி வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார்.அப்போது, அங்கு அதிவேகமாக வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சிறுமி மீது மோதி அருகே உள்ள வீட்டுக்குள் புகுந்து நின்றது. இந்த விபத்தில் சிறுமி ஷாருகாசினி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post வீட்டுக்குள் கார் புகுந்து 4ம் வகுப்பு மாணவி பலி appeared first on Dinakaran.

Tags : Kallampalayam ,Palladam ,Tirupur ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருட்கள் பறிமுதல்