×

பள்ளிக்கு ஆயுதங்களுடன் வந்த மாணவருக்கு ‘டிசி’: 3 மாணவர்கள் சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவரை பள்ளி வளாகத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.  இதனால் இரு பிரிவைச் சேர்ந்த தலா 2 மாணவர்கள், இரண்டு அணிகளாக செயல்பட்டனர். தாக்கிய மாணவர்கள் தங்களை திருப்பி தாக்கக் கூடும் என்று கருதிய 9, 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் கடந்த 18ம் தேதி புத்தகப் பைகளில் அரிவாள், கத்தியை மறைத்து எடுத்து வந்தனர்.

இதுபோன்று எதிர் தரப்பை சேர்ந்த மாணவர்களும் அரிவாள், இரும்பு ராடுகளை கொண்டு வந்தனர். இதை பறிமுதல் செய்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகம் 9ம் வகுப்பு மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்கி அவரை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்தது. மேலும் 3 மாணவர்களை அக். 3ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளிக்கு ஆயுதங்களுடன் வந்த மாணவருக்கு ‘டிசி’: 3 மாணவர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : DC ,Nellai ,
× RELATED மகனுக்கு குத்துச்சண்டை பயிற்சி தாயை...