×

தமிழகத்தில் மேலும் 1,538 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,538 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,11,837 ஆக உயர்ந்துள்ளது. 17,322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 1,753 பேர் குணமடைந்துள்ளனர். 22 பேர் நேற்று உயிரிழந்தனர். இதுவரை 34,878 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் நேற்று புதிதாக 189 பேர், செங்கல்பட்டு 116 பேர், கோவையில் 209 பேர், ஈரோடு 132 பேர், சேலம் 113 பேர் என 5 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

The post தமிழகத்தில் மேலும் 1,538 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Chennai ,Tamil Nadu ,Department of People's Wellbeing ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...