×

பெட்ரோலில் வேடிக்கை காட்டியவர் மீது தீ

வேளச்சேரி: தரமணி அருகே பெட்ரோல் பாட்டிலை திறந்து தீ வைத்து வேடிக்கை காட்டியவர்மீது தீப்பிடித்தது. அவர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை தரமணி அருகே கானகம், தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர்  தினேஷ்குமார் (26). இவர் ஐடிஐ முடித்து, தற்போது அரசு வேலை தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை ஒரு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, அதை நன்கு குலுக்கிவிட்டு மூடியை திறக்கிறார். அப்போது வெளியேறும் ஆவியில் தீ வைத்து வேடிக்கை காட்டியபடி இருந்தார். அப்போது தினேஷ்குமார்மீது பெட்ரோல் சிதறியதால், அவரது உடலில் தீப்பிடித்து பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, தினேஷ்குமாரின் உடலில் பரவிய தீயை அணைத்தனர். பின்னர் அவரை பலத்த தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post பெட்ரோலில் வேடிக்கை காட்டியவர் மீது தீ appeared first on Dinakaran.

Tags : Tharamani ,
× RELATED வேதியியல் தொழில்நுட்ப பயிலகத்தில்...