×

பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்காக ரேஷன் கடை முன்பு அதிமுக பேனர்: திமுகவினர் சாலை மறியல்

குன்றத்தூர்: மாங்காடு அருகே அய்யப்பன்தாங்கல் பகுதியில் ரேஷன் கடை முன்பாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிமுகவினர் பேனர் வைத்ததை கண்டித்து, திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் 2,500, பொங்கல் தொகுப்பு பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அனைத்து ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசுகள் வினியோகம் செய்ய தொடங்கப்பட்டது.இந்நிலையில், மாங்காடு அடுத்த அய்யப்பன்தாங்கல் ஊராட்சி  பகுதிகளில் உள்ள ரேஷன்கடை முன்பு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அதிமுகவினர் பேனர்களை வைத்து, பொங்கல் பரிசு வழங்கினர். இதையறிந்ததும், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் திமுகவினர் அங்கு சென்றனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக அதிமுகவினர் பேனரை வைத்து, பொங்கல் தொகுப்பு பரிசுகளை வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பரபரப்பு நிலவியது.தகவலறிந்து மாங்காடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, இரு தரப்பினரிடமும் சமரசம் பேசினர். ஆனால், அங்கிருந்த அதிமுக பேனரை அகற்றவில்லை. இதனால் திமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த அதிமுக பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டன. இதையடுத்து, திமுகவினர் சாலை மறியலை கைவிட்டனர். மேலும் பொங்கல் தொகுப்பு பரிசுகளை அதிமுக பேனர்களை வைத்து அதிமுகவினர் கொடுக்கக்கூடாது என்றும், இதுபோன்ற நிலை தொடர்ந்தால், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்த போவதாகவும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்….

The post பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்காக ரேஷன் கடை முன்பு அதிமுக பேனர்: திமுகவினர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Pongal ,DMK ,Kunradthur ,Ayyappanthangal ,Mangadu ,ADMK ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி